அரூர் பேரூராட்சி சார்பாக அரூர் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்.தூய்மை பணிகளை பார்வையிட்ட சார் ஆட்சியர் மு.பிரதாப்
" alt="" aria-hidden="true" />
கொரோனா நோய்த்தொற்று இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது இந்நிலையில் இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.தர்மபுரி மாவட்டம் அரூரில் உள்ள தோல் சாப் தெரு, சிந்தல்பாடி சாலை, கோவிந்தசாமி நகர், திருவிக நகர் விரிவு, ஆத்தோர வீதி, கலைஞர் நகர், பெரியார் நகர், வர்ண தீர்த்தம், மேல் பாட்சா பேட்டை, கீழ் பாட்ஷா பேட்டை, பாரதியார் நகர், மற்றும் அரூர் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவுவதை தடுக்க அரூர் சார் ஆட்சியர் உத்தரவின் படி அரூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் அரூர் நகரம் முழுவதும் நான்கு சக்கர வாகனத்தின் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இத்தூய்மை பணிகளை அரூர் சார் ஆட்சியர் திரு.மு.பிரதாப் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்